
தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் வெற்றி நடிகர் அசோக்கை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தற்போது அப்படத்தில் அவருடன் நடித்த வாணி போஜனுடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் அசோக் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் மணிரத்தினத்தின் ஆடிட்டர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் துவங்கவுள்ளது.
இப்படத்திற்காக் 103 கிலோ எடை போட்டதாகவும், இப்படம் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானது எனவும் அசோக் தெரிவித்துள்ளார். லண்டலின் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சமையம் செய்யும் செப்ஃ வேடத்தில் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.