சூர்யாவை வைத்து நந்தா மற்றும் பிதாமகன் என இரண்டு திரைப்படங்களை பாலா இயக்கினார். அதன்பின், பல வருடங்கள் இருவரும் இணையவில்லை. ஒருபக்கம் சூர்யாவும் வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

சமீபத்தில் பாலாவும், சூர்யாவும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்தனர். இப்படத்தை சூர்யாவே தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரியில் துவங்கியது.

இந்த படப்பிடிப்பில் சில காரணங்களால் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே, படப்பிடிப்பிலிருந்து வெளியேறி சென்னை வந்துவிட்டார். அதன்பின் மீண்டும் தற்போது வரை படப்பிடிப்புகள் துவங்கப்படவே இல்லை.
ஒருபக்கம், இந்தபடம் தொடர்வே வாய்ப்பில்லை என அப்படக்குழுவினர் சிலர் வெளியே தகவலை கசிய விட்டனார்.

ஆனால், பாலாவுடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும், இப்போது வரை படப்பிடிப்பு துவங்கப்படவே இல்லை.

இந்நிலையில், சூர்யா ஏன் கோபப்பட்டார் என்கிற செய்தி தற்போது வெளியே கசிந்துள்ளது. கன்னியாகுமாரியில் பல வீடுகள் இருப்பது போல் ஒரு செட் ஒன்று ரூ.25 லட்சம் செலவில் போடப்பட்டது. ஆனால், அதில் ஒரு காட்சியை கூட பாலா எடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான சூர்யா படப்பிடிப்பிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.