suraj

கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தது, 24ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்தது என அவர் மீது அதிருப்தி அடைந்த திரையுலகினர் கிட்டத்தட்ட அவரை ஒதுக்கியே விட்டனர்.

இந்நிலையில், தலைநகரம், மருதமலை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் வடிவேல் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கு ‘நாய் சேகர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்கிற கதாபாத்திரத்தில் வடிவேல் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், அதையே தலைப்பாக வைத்துவிட்டனராம்.

விரைவில் இதுபற்றி அறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.