பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரிந்தவர் அட்லி. ஆர்யா – நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கினார்.
பிகில் படத்திற்கு பின் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க கடந்த 2 வருடங்களுக்கும் மேல் மும்பையில் தங்கி அப்படத்திற்கான வேலைகளை செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு புனேவில் நடந்தது. இப்படத்தில் நயன்தாராவும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், புஷ்பா எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு புதிய படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பே அல்லு அர்ஜூனிடம் ஒரு கதையை அட்லீ கூறியுள்ளார். தற்போது அப்படத்தில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார் அல்லு அர்ஜூன். தற்போது அவர் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.
சில மாதங்கள் கழித்து அட்லீ – அல்லு அர்ஜூன் இணையும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.