விக்ரமின் திரை வாழ்வை மாற்றிய சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. நந்தா, பிதாமகன், நான் கடவுள் என கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கியவர். நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றார். அடுத்து சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது மனைவி முத்து மலரிடமிருந்து இன்று விவாகரத்து பெற்றது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு. கடந்த 4 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றதும் தெரிய வந்துள்ளது.
இது திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.