ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், கஜோல் உள்ளிட்ட பலரும் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. ஆனால், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த நிலையில், சிறிது நாள் மட்டும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.
இதற்கிடையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவின் மகன் ராம் சரண் மற்றும் பவன் கல்யாணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஷங்கர் கூறிய கதை ராம் சரணுக்கு பிடித்துள்ளதாம். தற்போது, பவன் கல்யாணின் சம்மதத்திற்காக ஷங்கர் காத்திருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ராம்சரணும், ஷங்கரும் இணையதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இது தொட்ர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 3 மொழிகளில் வெளியாகும் எனத்தெரிகிறது.