தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இவர்களின் திரைப்படங்கள் கோடிகளை வசூலிக்கும் என்பதால் பல தயாரிப்பாளர்கள் அவர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள். தற்போது அதில் கமல்ஹாசனும் இணைந்துள்ளார்.
கமல் தற்போது தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தை அவர் எடுத்து வருகிறார். ஆர்யா-முத்தையா கூட்டணியில் ஒரு படம் பேசப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில், அப்படத்தை தான் தயாரிக்க விரும்புவதாக லோகேஷ் கனகராஜ் மூலம் விஜய்க்கு தூது விட்டுள்ளார் கமல். இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே,விஜய் ஓகே சொன்னால் இந்த படம் இல்லையேல் அப்படத்திற்கு அடுத்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தான் தயாரிக்க விரும்புவதாக கமல் கூறியிருக்கிறாராம்.
முடிவு விஜய் கையில்!..