கன்னட திரைப்படங்களை சினிமா ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் கேஜிஎப் திரைப்படம் சூறாவளி போல வந்து அதை மாற்றியது. அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல். கர்நாடகாவில் உள்ள தங்க சுரங்கம் செயல்படும் இடத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார்.
தற்போது அதன் 2ம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன்பு வரை இப்படம் ரூ.800 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில்,கேஜிஎப்-2 திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய சினிமாக்களில் இதுவரை தங்கல்,பாகுபலி-2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய 3 படங்கள் மட்டுமே இதுவரை ரூ.1000 கோடி செய்த பட்டியலில் இருந்தது. தற்போது கேஜிஎப்-2 திரைப்படமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
அடுத்து கேஜிஎப் மூன்றாம் பாகத்திற்கும் இப்படக்குழு தயாராகி விட்டது. அடுத்து அதே கேஜிஎப்-ஐ மையமாக வைத்து சலார் என்கிற படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இதில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.