சில பிரச்சனைகளில் சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு அந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படம் தொடர்பான பணிக்காக அவர் கடந்த மாதம் லண்டன் சென்று திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அவருக்கு சென்னை போரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் குணமடைந்தார். பின்னர், மீண்டும் வடிவேல், சுராஜ், இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட சில லண்டன் புறப்பட்டு சென்றனர். தற்போது இப்படத்திற்கான பாடல் கம்போசிங் பணி லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனும் இடம் பெற்றுள்ளார்.