nanayntha

பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்றுசென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு திரையுலகில் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே, நடிகர், நடிகையர்கள், தயாரிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். நயன் -விக்கி திருமணத்திற்காக பெரிய அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.. திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இயக்குனர் கவுதம் மேனன் இதை இயக்கி வருகிறார். திருமண விழா நேற்று முன் தினம் மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது.

nayan

திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. செய்தியாளர்களுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை.

இந்த திருமணத்தில் அஜித் குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும், நடிகர் ரஜினி, விஜய், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இயக்குனர் அட்லி, நடிகர் கார்த்தி, சரத்குமார், டிடி, போனிகபூர், இயக்குனர் ஏ.எல்.விஜய்,கலா மாஸ்டர் என திரையுலகை சேர்ந்த பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். தமிழகம்

உள்ள ஆதரற்றோர் மற்றும் முதியோர் இல்லங்கள் என ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.