vignesh

பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருந்து திருமணத்தை நெருங்கியிருக்கிறது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. நாளை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்காக பெரிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்து இதை உறுதி செய்தார் விக்னேஷ் சிவன். திருப்பதியில் நடக்கவிருந்த திருமணம் சில காரணங்களால் சென்னையில் நடப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், முதல் ஸ்டாலின் உட்பட சுமார் 200 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. திருமண விழா நேற்று மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது.

திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.