nayan

பல மாதங்களாக நடக்காமலிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் மீண்டும் துவங்கியது. ரஜினி அரசியல் கட்சியை துவங்கவுள்ளதால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. ரஜினி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நடித்துக்கொடுத்து வந்தார்.

இதற்கிடையே படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், ரஜினிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்வாக வந்தது. ஆயினும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அப்படத்தில் நடித்து வந்த நடிகை நயன்தாரா, படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஹைதராபாத் சாலையில் நடந்து செல்லும் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், விக்னேஷ் சிவனும், நயனும் கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்ட ஒரு கடையில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு நயன் ரசிகர்களுக்கு இந்த புகைப்படமே கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

nayan