chitra

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வேடத்தை முடிவுக்கு கொண்டு வர சீரியல் டீம் முடிவு செய்துள்ளதாம். அவரின் கதாபாத்திரம் இறந்து விட்டது போல் காட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முல்லை வேடத்தில் சித்ராவை தவிர வேறு யாரையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என அந்த சீரியலின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.