பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபாஸ். ராஜமவுலியின் கதை, திரைக்கதையில் அவரின் கதாபாத்திரம் செம மாஸாக இருந்து. 2 பாகங்களாக வெளிவந்த பாகுபலி படத்தால் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார் பிரபாஸ். எனவே, அவர் நடிக்கும் படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளியானது.
ஆனால், பாகுபலிக்கு பின் அவரால் ஹிட் படங்களை கொடுக்க முடியவில்லை. பாகுபலிக்குபின் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் சாஹோ. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அப்படத்திற்கு பின் ராதே ஷ்யாம் என்கிற காதல் கதையில் அவர் நடித்தார்.
இப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளில் வெளியானது. ஆனால், இப்படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்கள் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்துவரவில்லை. இப்படம் ரூ.315 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் இப்படம் மிகவும் சொற்பமான வசூலையே பெற்றுள்ளது. தமிழக வெளியிட்டு உரிமை பெற்றவருக்கு ரூ.1.15 கோடி மட்டுமே வரவாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிந்தியில் 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரூ.25 கோடியை மட்டுமே வசூல் செய்தது. இப்படம் ரூ.150 கோடியை வசூல் செய்துவிட்டதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு வாரத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதன்பின் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அனைத்து மொழிகளிலும் எல்லாம் சேர்த்து மொத்தமாக இப்படம் இதுவரை ரூ.175 கோடியை மட்டுமே வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது.
எனவே, தயாரிப்பாளருக்கு இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. மேலும், அடுத்து வெளியாகும் பிரபாஸின் படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.