பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.
இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பல வருடங்களுக்கு பின் ஒரு மென்மையான காதல் கதையில் விஜய் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் விஜயின் அண்ணணாக சரத்குமார் நடிக்கவுள்ளாராம். இது விஜய் நடிக்கும் 66வது திரைப்படமாகும்.
இப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் ஹைதரபாத் சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம்1ம் தேதியே துவங்கவிருந்தது. ஆனால்,புஷ்பா படத்திற்கு பின் நிறைய படங்களில் நடித்து வரும் ராஷ்மிகாவால் 1ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, விஜய் உள்ளிட்ட அனைவரும் அவருக்கா காத்திருக்க நேரிட்டது தெரியவந்துள்ளது.