விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் அதிக டி.ஆர்.பி பெற்ற சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மாதான். இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன்.

இவருக்காகவே பலரும் இந்த சீரியலை பார்த்து ரசித்து வந்தனர். கணவனால் கைவிடப்பட்டாலும் தன்னுடைய சொந்த உழைப்பில் வாழும் தைரியமுள்ள பெண்ணாக நடித்து அவர் அசத்தியிருந்தார்.

roshini

ஆனால், திடீரென அவர் சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதில் தற்போது வேறு நடிகை கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

சீரியலில் நடித்து கொண்டே இருந்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதால் ரோஷினி ஹரிப்பிரியன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

roshini

சீரியலில் இருந்து விலகிய பின் ரோஷினி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

roshini