rajendar

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், கதாசிரியர், பாடலாசியர் என சகலகலா வல்லவனாக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். 80களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் சிம்பு வளர வளர இவர் திரையுலகிலிருந்து விலகி இருந்தார்.அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பது, சிம்பு படங்களில் பாடுவது என பரபரப்பை ஏற்படுத்துவார்.

rajendar

நேற்று, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.மேலும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் எனவும், விரைவில் அவரை சிங்கப்பூர் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க அவரின் குடும்பத்தினர் முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள சிம்பு ‘என் தந்தைக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு உயர்தர சிகிச்சை தர வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.அவர் முழு சுய நினைவுடன் நலமாக இருக்கிறார். விரைவில் உங்களை சந்திப்பார்’ என தெரிவித்துள்ளார்.

simbu