வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தில் அஜித்தை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார். அப்படத்திற்கு பின் விஜய் – ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். அப்படமும் சூப்பர் வெற்றி அடைந்தது.
அதன்பின் நடிக்கும் ஆசை வந்துவிட அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க துவங்கினார். ஆ.ஆ, இசை, நியூ என சில படங்களை இயக்கி நடித்தார். ஆனால், அவை பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.எனவே, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். அவரின் முகத்திற்கு வில்லன் வேடங்கள் கிடைத்தன. விஜய் நடித்த மெர்சல் படத்திலும், முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்திலும் டெரர் வில்லனாக நடித்தார்.
சிம்பு நடித்த மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.