நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.சூர்யாவின் கையில் பாலா இயக்கத்தில் ஒரு படம், அடுத்து சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறனுடன் வாடிவசல் என 3 படங்கள் இருக்கிறது.
இதில், பாலா படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், படப்பிடிப்பில் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இப்படம் தொடருமா என்பதே சந்தேகமா இருக்கிறது.
இந்நிலையில், சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் வேலைகள் துவங்கியுள்ளது. இப்படம் ஒரு பீரியட் கதை எனவும், பாகுபலி, கேஜிஎப் போல இப்படம் 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.