
நெல்சனுக்கு பின் ரஜினியை இயக்குவது இவரா?…கசிந்த செய்தி
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப் குமார் என்பது உறுதியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு பின் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜாவின் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. போனிகபூர் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்தவர். அஜித் அடுத்து நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தையும் போனிகபூர்தான் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது....