
ஆஸ்கர் வாய்ப்பை இழந்த ஜெய்பீம்…. அப்செட்டில் சூர்யா ரசிகர்கள்….
சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படம் சில வருடங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பாராட்டியிருந்தனர்.
இப்படம் பல விருதுகளையும் பெருமையையும் பெற்றது. இந்த படத்தை தயாரித்ததற்காக உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. Noida International Film Festival – அதாவது நொய்டா திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வானது.
ஒருபக்கம், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது ஜெய்பீம் படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 94வது ஆஸ்கர் விருதுக்கு சிறந்த திரைப்பட பிரிவில் பங்கேற்கும் திரைப்படங்...