thalaivar

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படம் ரஜினியின் 169வது திரைப்படமாகும். பீஸ்ட் திரைப்படம் தோல்வி அடைந்துள்ள நிலையில் கதையில் சில மாற்றங்களை நெல்சன் செய்து வருகிறாரம்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ்.ரவிக்குமார், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் என பலரும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் சிறையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது எனவும், இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதகவும் செய்திகள் கசிந்துள்ளது.