திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ராமராஜன், சரோஜா தேவி, பழம் பெரும் நடிகை சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருந்து வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தமிழக அரசுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.