கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் உருவாக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜூன் என பலரும் நடித்துள்ளனர்.

 

இப்படத்தில் திரிஷா குந்தவி என்கிற வேடத்தில் நடித்துள்ளார். தைரியமான சோழ நாட்டு இளவரசியாக அவர் கலக்கி உள்ளாராம். இப்படத்தில் அவர் குதிரையில் செல்லும் பல காட்சிகள் வருகிறது. எனவே, இதற்காகவே சில நாட்கள் அவர் குதிரை ஏறும் பயிற்சியை பெற்று பின் இப்படத்தில் நடித்துள்ளார்.

trisha

இவர் நடித்த காட்சிகளை பார்த்த படக்குழு திரிஷாவின் சினிமா வாழ்வில் இப்படம் அவரின் சிறப்பான படமாக இருக்கும் என உறுதியாக கூறுகிறார்கள். இப்படத்திற்கு திரிஷா அவரே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது கூடுதல் செய்தி.