udhay

இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் பாகுபலி. இப்படத்தின் 2 பாகங்களும் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம், மூலம் ராஜமவுலி இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

இந்த படத்திற்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

rrr

இந்நிலையில், இப்படம் தொடர்பான நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனும், உதயநிதி ஸ்டாலினும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய உதயநிதி நான் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் துவங்கிய போதுதான் ராஜமவுலி இயக்கிய மஹதீரா திரைப்படம் வெளியானது. அப்படத்தை தமிழகத்தில் நான் வெளியிட்டேன். அப்போது ‘சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த தியேட்டர் சத்யம். அதில் இந்த படத்தை வெளியிட வேண்டும்’ என ராஜமவுலி என்னிடம் கேட்டுக்கொண்டார். அப்படியே செய்தோம்.

இப்போது ஆர்.ஆர்.ஆர் படம் சத்யம் தியேட்டரில் உள்ள 6 திரையரங்குகளில் 5ல் வெளியாகும் என உறுதி அளிக்கிறேன். ஆர்.ஆர்.அர். திரைப்படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என அவர் பேசினார்.