venkat

சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரானவர் வெங்கட் பிரபு. இவர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மூத்த மகன் ஆவார்.

சென்னை 28 ஹிட் அடிக்கவே சரோஜா, கோவா என சில படங்கள் எடுத்தார். ஆனால், அஜித்தை வைத்து அவர் எடுத்த மங்காத்த திரைப்படம் அவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. அதன் பின்னரும் அவர் சில படங்கள் எடுத்தார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை.

maanaadu

சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம் அவரின் திரை வாழ்வை மாற்றியுள்ளது. மாநாடு திரைப்பட்டம் கிட்டதட்ட 100 கோடி வசூலை எட்டியது. மாநாடு படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 4 கோடி மட்டுமே.

ஆனால், தற்போது ஒரு தெலுங்கு படத்திற்கு அவர் பேசியுள்ள சம்பளம் ரூ.15 கோடி என்கிறார்கள். அதேநேரம், ஒரு புதிய தமிழ் படத்தை இயக்க ரூ.7 கோடி சம்பளமும் அவருக்கு பேசப்பட்டுள்ளது. எப்படியோ, மாநாடு திரைப்படம் அவரை எங்கோ கொண்டு சென்றுவிட்டது.