இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு நேற்று நயனும், விக்கியும் திருப்பதி கோவிலிக்கு வழிபட சென்றனர். அப்போது கோவிலுக்குள் இருவரும் செருப்பு அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ‘திருமணம் முடிந்தபின் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டோம். அப்போது பலரும் எங்களை சூழ்ந்து கொண்டனர். எனவே அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மீண்டும் கோவிலுக்கு வந்தோடும். ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் வேகமாக போட்டோசூட் நடத்தி முடித்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம். இதனால் ஏற்பட்ட பரபரப்பில் காலில் செருப்பு அணிந்திருப்பதை கவனிக்க தவறிவிட்டோம். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பதி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 முறை திருப்பதி மலைக்கு சென்றோம். ஆனால், சில காரணங்களால் அங்கு திருமணத்தை நடத்த முடியாமல் போய்விட்டது’ என அந்த கடிதத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.