சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஓரிரு படங்கள்தான் எடுத்திருப்பார்கள். ஆனால், அவர்களின் படைப்புகள் சினிமா வரலாற்றில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அதில் ஒருவர்தான் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆரண்ய காண்டம். இப்படம் 2011ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை இயக்குனர்கள் பலரே பாராட்டியிருந்தனர்.
அதன்பின் அவர் இயக்கிய திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து தேசிய விருதும் பெற்றார். மேலும், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பஹத் பாசில் என பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஆரண்ய காண்டம் போல மீண்டும் ஒரு ராவான கதையை இயக்கவுள்ளாராம். இதில், 2 கதாநாயகர்கள் எனவும், அதில் ஒருவராக நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.